செய்திகள்

சிரியாவில் அரசுப் படைகளுடன் மோதல் - 73 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2017-10-29 09:50 GMT   |   Update On 2017-10-29 09:50 GMT
சிரியா நாட்டில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

இதுதவிர, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.


இந்நிலையில், சிரியா நாட்டின் கிழக்கே உள்ள டேய்ர் எஸ்ஸார் நகரின் முக்கிய பகுதியை மீட்பதற்காக கடந்த 24 மணி நேரத்தில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 50 ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்பட 73 பேர் கொல்லப்பட்டதாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டின் மனித உரிமைகள் குழு இயக்குநர் ரமி அப்தெல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News