செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா மாணவர் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Published On 2016-12-28 19:27 GMT   |   Update On 2016-12-28 19:27 GMT
லஷ்கர்-இ-தொய்பாவின் மாணவர் பிரிவான அல் முகமதியாவை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தானை மையமாக கொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்படுகிறது. இதன் மாணவர் பிரிவாக அல்-முகம்மதியா அமைப்பு உள்ளது.

இந்நிலையில், அல்-முகம்மதியாவை ஒரு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், அதன் மூத்த தலைவர்கள் முகமது சர்வார் மற்றும் ஷகித் முகமது ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இருவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறார்கள்.

இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் அதன் முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியிட்டது முதல் எல்.இ.டி அமைப்பானது தடைகளில் இருந்து தப்பிக்க தொடர்ச்சியாக தனது பெயரை மாற்றிக் கொண்டே வந்தது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Similar News