தமிழ்நாடு செய்திகள்
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
- மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அவற்றை மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தவிர விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ-மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.