தமிழ்நாடு செய்திகள்

இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-08-02 19:25 IST   |   Update On 2025-08-02 19:25:00 IST
  • ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.
  • மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அங்கு அவர் பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் என பெயர்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் வைக்கிறது திமுக அரசு.

அம்மா மினி கிளினிக்குகளை திறந்தாலே பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும்.

மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News