மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷணன் சாமி தரிசனம்
- நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
- முதல்வர் ஸ்டாலின் இரவில் புறப்பட்டு நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழகம் வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவுக்கு பின் கோயம்பத்தூர் விமானம் நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நாளை மதியம் 12 மணியளவில் மீண்டும் டெல்லி செல்கிறார். இன்று தென்காசி, நெல்லையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.