தமிழ்நாடு செய்திகள்
கந்து வட்டி புகார்- நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
- காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1 லட்சத்து அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.