மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள்: ஆ.ராசா கடும் விமர்சனம்
- சமீபத்தில் அமித் ஷா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
- ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
தமிழகத்தை பிடிக்கப்போவதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள் என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:-
* சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.
* இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது.
* எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது.
* 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் எனச் சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது.
* ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள்.
* சமீபத்தில் அமித் ஷா, மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்துவிட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
* முட்டாள்... முட்டாள்... டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது தனி மனிதனை. ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.