தமிழ்நாடு செய்திகள்

விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசல்: உயிர்ப்பலி 31 ஆக உயர்ந்த சோகம்

Published On 2025-09-27 21:09 IST   |   Update On 2025-09-27 21:44:00 IST
  • அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர், பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலயைில் உயிர்ப்பலி 29 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர்களின் உயிர் பிரிந்தது. சடலமாக கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உயிர்ப்பலி 31 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News