தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தார்களே, செய்தார்களா?- விஜய் கேள்வி

Published On 2025-09-27 15:07 IST   |   Update On 2025-09-27 15:57:00 IST
  • மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு சுபராயனுக்கு உண்டு.
  • அவருக்கு மணி மண்டபம் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள், செய்தார்களா?.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று நாமக்கல் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து பிராசரம் செய்கிறார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையாக வழங்கியதும், இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர்தான். அவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்பராயன்தான் அவர். அவர்தான் மாபெரும் மனிதர். மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உண்டு.

பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். இதனால்தான் முதல்வராக பதவி ஏற்ற முதல் தமிழர் என்ற பெருமையாக சொன்னதும் மட்டுமல்ல, அவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது யார்?. சொன்னார்களே செய்தார்களா?.

வடிவேல் ஒரு படத்தில் Empty பாக்கெட்டை காட்டுவதுபோல், ஒவ்வொரு வாக்குறுதியையும் படித்துவிட்டு, பாக்கெட்டை காட்ட வேண்டியதுதான்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Tags:    

Similar News