தமிழ்நாடு செய்திகள்
தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் காயிதே மில்லத் - விஜய்
- சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்தவர் காயிதே மில்லத்.
- காயிதே மில்லத் பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.