சென்னையில் நாளை (28.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நாளை (28-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் - ராஜாகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா அய்யர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகர், கண்ணன் நகர் மற்றும் ஐ.ஓ.பி. காலனி, சிட்லபாக்கம் ஜிஎஸ்டி சாலை, சித்தா மருத்துவம், சுந்தரம் காலனி 1, 2, 3-வது பிரதான தெரு, எஸ்.வி.கோயில் தெரு, வி.வி.கோவில் தெரு, ரெயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் மெயின் ரோடு 1, 2, 3 குறுக்குத் தெரு, வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு குப்புசாமி தெரு, மாதவன் தெரு, சுந்தராம்பாள் நகர், ஷர்மிளா நகர், நீர் வாரியம், ஜீவா நகர், குமரன் தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி.
அம்பத்தூர் - ஜெ.ஜெ நகர் சர்ச் சாலை, டிரினிட்டி சர்ச் சாலை, ஓ.வி.ஜோசப் தெரு, வசந்தா தெரு, லிசா பொன்னம்மாள் தெரு, சீனிவாசன் தெரு, பாக்கியம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, செல்வி ஜெயக்குமார் தெரு, ஆரணி சுப்ரமணியன் தெரு, ஜார்ஜ் ரத்தினம் தெரு, சிசிலி புஷ்பம் தெரு, ரத்தினவேல் பாண்டியன் தெரு , ஜி.ஜி. நகர்.
திருவேற்காடு - மகாலட்சுமி கல்லூரி சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயக நகர், செல்லியம்மன் நகர், பசுமை பூங்கா, சக்கரேஸ்வரி நகர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.