தமிழ்நாடு செய்திகள்

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Published On 2025-08-08 11:33 IST   |   Update On 2025-08-08 11:33:00 IST
  • கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
  • தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.

தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

மொத்த விற்பனை:

ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45

முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10

சில்லறை விற்பனை:

ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60

விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு

தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News