அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் தூய்மை மிஷன் திட்டம்- துணை முதலமைச்சர்
- குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.
தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகளை கண்காணிக்க சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.