தமிழ்நாடு செய்திகள்

மாநில அரசு அலர்ட்டாக உள்ளது - உதயநிதி

Published On 2025-10-22 09:32 IST   |   Update On 2025-10-22 09:34:00 IST
  • புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  • டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* சமூக வலைதளங்கள், போன் மூலம் வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, சில பேரிடம் பேசினேன். நானே நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி இருக்கிறேன். நானும், கமிஷனரும், அதிகாரிகளும் நேரில் செல்கிறோம்.

* டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார். பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்கள். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். எல்லா இடத்திலும் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. மாநில அரசு அலர்ட்டாக உள்ளது.

* இன்று காலை 4 மணி முதல் எந்த பகுதி மக்களுக்கு உணவு தேவையோ அவர்களுக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News