தமிழ்நாடு செய்திகள்

கோடை சீசனை முன்னிட்டு கோவை-ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2025-05-01 14:51 IST   |   Update On 2025-05-01 14:51:00 IST
  • தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
  • பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கோவை:

கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்ந்து கோவை-ஊட்டி இடையே மேலும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவது என்று கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்து உள்ளது.

இதுதொடர்பாக கோவை போக்குவரத்துக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து ஊட்டிக்கு தினமும் இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன், மேலும் கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகம் இருந்தால் மேலும் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News