தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

Published On 2025-08-14 10:47 IST   |   Update On 2025-08-14 11:21:00 IST
  • தெலுங்கானாவிற்கு வர வேண்டிய 3 ஆலைகள் குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஒப்பந்தம்.
  • தமிழ்நாட்டுக்க வர வேண்டிய ஒரு ஆலையும் குஜராத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டு ஒப்பந்தம்.

காங்கிரஸ் தலைவர் செமி கண்டக்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

விரிவான செயல் திட்டத்திற்குப் பிறகு ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.

வெகு காலத்திற்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. 2 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது.

இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இந்தியாவை வலிமையாக்கும் என பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News