தமிழ்நாடு செய்திகள்
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு தடை
- டிஜஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.