தமிழ்நாடு செய்திகள்

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

Published On 2025-04-26 10:05 IST   |   Update On 2025-04-26 10:05:00 IST
  • கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவராக பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன் (84). வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வு தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

Similar News