தமிழ்நாடு செய்திகள்
விடியல் பயணமா? முடியும் பயணமா? - ஆர்.பி.உதயகுமார்
- 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
- தி.மு.க. அரசின் ஆட்சி சக்கரம் சுழல்கிறதா? சிதறிக் கிடக்கிறதா?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று அரசு பஸ்சில் அச்சு முறிந்து சாலையில் சக்கரங்கள் ஓடிய விபத்தில் 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:
* தி.மு.க. ஆட்சியில் விடியல் பயணமா, வாழ்க்கை முடியும் பயணமோ என மக்கம் அச்சம் கொண்டுள்ளனர்.
* தி.மு.க. அரசின் போக்குவரத்து துறை செயல்பாடு மக்களை ஆபத்தில் இட்டுச் செல்கிறது.
* 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
* பணியாளர்கள் பற்றாக்குறையால் பேருந்து பழுது பார்ப்பு சரியாக இல்லை.
* தி.மு.க. அரசின் ஆட்சி சக்கரம் சுழல்கிறதா? சிதறிக் கிடக்கிறதா?
இவ்வாறு அவர் கூறினார்.