தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்...

Published On 2025-10-25 10:11 IST   |   Update On 2025-10-25 10:11:00 IST
  • பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News