ஐ.பி.எல்.(IPL)
null
ஐபிஎல் 2025: அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங்- லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு
- பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
- 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது.
இதன்மூலம், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 237 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.