தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் கைது

Published On 2025-06-28 15:03 IST   |   Update On 2025-06-28 15:03:00 IST
  • வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
  • தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. மருத்துவரை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுக்கையிட்டு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News