தமிழ்நாடு செய்திகள்

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி

Published On 2025-09-26 12:36 IST   |   Update On 2025-09-26 12:36:00 IST
  • விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
  • விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர்:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News