தமிழ்நாடு செய்திகள்

தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி - மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-28 12:30 IST   |   Update On 2025-05-28 12:30:00 IST
  • இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 76 கடிதங்களை எழுதி உள்ளேன்.
  • மீனவர்களுக்கான அதிக திட்டங்களை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.

சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ. 46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* 1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.1528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை காக்கவே கச்சத்தீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றினோம்.

* இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 76 கடிதங்களை எழுதி உள்ளேன்.

* இதுவரை ஆயிரத்து 300 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

* தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி.

* படகுகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

* மீனவர்களுக்கான அதிக திட்டங்களை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.

* மீனவர்களுக்காக இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News