கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர்! விஜயை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்
- மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
- வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.
சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்த துணை முதலமைச்சர் உதயநிதியை 'கொள்கை இளவல்' எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அறிவு திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வேண்டும் நடத்திட வேண்டும் என உதயநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
* திருவள்ளுவர் கோட்டமே திராவிடக்கூட்டமாக மாறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
* உலகத்தமிழர்கள் உள்ளத்தில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பேரியக்கம் தி.மு.க.
* தி.மு.க.வை தொடங்கியது அண்ணா, 50 ஆண்டுகளாக கட்டி காத்தவர் கலைஞர்.
* அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக கொண்டு செயல்படுகிறது தி.மு.க.
* மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
* கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர் என அறிவித்து விட்டு நாம் ஆட்சிக்கு வரவில்லை.
* வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.
* தி.மு.க.வை போல் வெற்றி பெற தி.மு.க.வை போல் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை
* ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.
* தி.மு.க.வை போல் வெற்றி பெற வேண்டும் என சில அறிவிலிகள் கனவு காண்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.