தி.மு.க.-வை தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
- SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.
சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. தொடங்கப்படவில்லை.
* ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் தி.மு.க. என எழுதி உள்ளார் ராகுல்காந்தி.
* அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்க விரும்பும் இயக்கம் என்கிறார் கெஜ்ரிவால்.
* தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
* கியூபா புரட்சி வரை பத்திரிகையில் எழுதி மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
* தி.மு.க. பெற்றுள்ள வெற்றி என்பது நாம் அடைந்த வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை.
* கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாமால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது.
* SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.
* தமிழகத்திற்குள்ளேயே தி.மு.க.வை முடக்க நினைத்தார்கள். ஆனால் நாம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறோம்.
* தி.மு.க.வை அழிக்க நினைப்போரின் எண்ணம் என்றும் நிறைவேறாது. இது கூடிக் கலைகின்ற கூட்டமல்ல.
* தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நேரத்தில் குழப்பதை ஏற்படுத்தவே SIR
* களத்தில் பணியாற்றும் தி.மு.க.வினர் போலி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வாக்காளர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.