விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு - மு.க.ஸ்டாலின் உறுதி
- எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முத்தரசன், திருமாவளவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
* எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
* வாக்குரிமையை காப்பாற்ற SIR பணிகளில் தி.மு.க.வினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்.
* தேர்தல் முடியும் வரை தி.மு.க.வினரின் பணிகள் முடிவடையவில்லை.
* சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்த்து அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
* அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில் ஒருபோதும் முறையாக பதில் அளித்தது இல்லை.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் தி.மு.க.வின் ஆட்சி தொடர வேண்டும்.
* தமிழ்நாட்டில் 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.