20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
- சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன்.
* 2011, 16-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது.
* மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கிறது.
* தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
* நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
* சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
* கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி தருகிறேன்.
* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.