தமிழ்நாடு செய்திகள்

20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-09 12:09 IST   |   Update On 2025-07-09 12:09:00 IST
  • நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
  • சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன்.

* 2011, 16-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது.

* மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கிறது.

* தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.

* நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.

* சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.

* கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி தருகிறேன்.

* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News