தமிழ்நாடு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு - 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2025-03-07 14:35 IST   |   Update On 2025-03-07 14:35:00 IST
  • மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை:

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தென்மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வருகிற 22-ந்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 தென்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

பினராயி விஜயன், சித்தராமையா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பகவந்த் மான் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News