தமிழ்நாடு செய்திகள்

புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்- அமைச்சர் சிவசங்கர்

Published On 2025-10-29 10:18 IST   |   Update On 2025-10-29 10:24:00 IST
  • மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.
  • அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என்ற அ.தி.மு.க.வினரின் புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க.வினர் தேவையற்ற புகாரை கூறி வருகின்றனர்.

* மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.

* மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

* பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவனமே பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

* அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

* புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News