தமிழ்நாடு செய்திகள்
இ.பி.எஸ். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்: நாங்கள் சொல்வதை செய்வோம்- அமைச்சர் ரகுபதி
- அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
- பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
* மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம்.
* தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.
* பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.