தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

Published On 2025-06-25 08:54 IST   |   Update On 2025-06-25 08:54:00 IST
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
  • 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை இன்று காலை பாதிக்கப்பட்டது.

கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான அட்டவணைபடி இயக்கப்படுகிறது.

விம்கோ நகர் டிப்போவிலிருந்து விமான நிலையம் வரை நீலப்பாதையில் மற்றும் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை பசுமைப் பாதையில் வழக்கமான அட்டவணைப்படி ரெயில் சேவைகள் இயங்குகின்றன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் மீண்டும் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News