தமிழ்நாடு செய்திகள்

திருநங்கையை காதலித்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வாலிபர்

Published On 2025-09-11 12:11 IST   |   Update On 2025-09-11 12:11:00 IST
  • இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
  • இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Full View
Tags:    

Similar News