தமிழ்நாடு செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்தநாள் - கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்

Published On 2025-10-02 13:09 IST   |   Update On 2025-10-02 13:09:00 IST
  • மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
  • காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவ சிலைக்கு கதராடை அணிந்து வந்து மாலை அணிவித்து மலர் தூவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News