தமிழ்நாடு செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்

Published On 2025-05-23 08:43 IST   |   Update On 2025-05-23 08:43:00 IST
  • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
  • நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். கோவை- தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலைகொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந்தேதி வாக்கில் உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News