தமிழ்நாடு செய்திகள்

கொடநாடு வழக்கு - இ.பி.எஸ். மீது டி.டி.வி.தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு

Published On 2025-11-06 12:45 IST   |   Update On 2025-11-06 12:45:00 IST
  • கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.
  • முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

* கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள்.

* கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.

* கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன்.

* எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார்.

* கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார்கள்.

* முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

* முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன்.

* கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News