தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.தான் விஜய்க்கு அடுத்தமுறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும்: இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சு

Published On 2025-09-22 11:13 IST   |   Update On 2025-09-22 11:13:00 IST
  • இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார்.
  • புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு' என்ற தீர்மான ஏற்பு கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.

நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் தி.மு.க. விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தி.மு.க.விற்கு அவர் வந்து விடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News