தமிழ்நாடு செய்திகள்

மக்களாட்சியின் தலைமையே வாக்குரிமைதான்- கமல்ஹாசன்

Published On 2025-11-02 14:50 IST   |   Update On 2025-11-02 14:50:00 IST
  • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?
  • தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:

* மக்களாட்சியின் தலைமையே வாக்குரிமைதான்.

* வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?

* தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்வதின் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா?

* இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.

* கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

* தகுதி உள்ள ஒருவரின் பெயரைக்கூட பட்டியலில் இருந்து நீக்கி விடக்கூடாது.

* சிறப்பு தீவிர திருத்தப்பணி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும். மேலும் புதிய பிரச்சனைகளை கொண்டுவந்து விடக்கூடாது.

* தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

* நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தர் ஆணையத்திற்கு உள்ளது.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News