தமிழ்நாடு செய்திகள்

ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது?

Published On 2025-06-14 17:53 IST   |   Update On 2025-06-14 19:52:00 IST
  • காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை புகார்.
  • கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாக்குமூலம் அடிப்படையில் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது எனத் தகவல்.

கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News