தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
- இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து புறப்பட்டது.
- முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரை கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்பட்டவுடன் மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானி சுமார் அரை மணி நேரம் பறந்த பிறகு கோளாறைக் கண்டறிந்து, திரும்பிச் செல்ல அனுமதி கோரியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் 68 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.