மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் காரணமாக கல்பாக்கத்தில் உள்ள சட்ராஸ் என்ற மீனவ கிராமத்தில் தற்போது 13 அடி வரை கடல் அலை எழுந்து, கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னை மெரினாவில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் வழக்கம்போல் புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கையாக தியாகராய நகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு திருவொற்றியூர் - 5 செ.மீ, தண்டையார்பேட்டை - 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ மழைப்பதிவு; சென்னையில் சராசரியாக 3.45 செ.மீ. மழைப்பதிவு
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை, புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2024) விடுமுறை அறிவிப்பு
ஃபெங்கல் புயல் காரணமாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்.
ஃபெங்கல் புயல் காரணமாக "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.