தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2500 கனஅடியாக குறைந்தது

Published On 2025-04-30 11:51 IST   |   Update On 2025-04-30 14:06:00 IST
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
  • நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

ஒகேனக்கல்:

கர்நாடகா தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2500 கன அடியாக குறைந்து உள்ளது.

இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

Tags:    

Similar News