தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை

Published On 2025-09-17 06:42 IST   |   Update On 2025-09-17 06:42:00 IST
  • கனமழையால் சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
  • வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகாலையில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. அண்ணாசாலை, எழும்பூர், சேத்து பட்டு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

சென்னை மட்டுமில்லாமல் திருப்பத்தூர், தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

Tags:    

Similar News