தமிழ்நாடு செய்திகள்

பருப்பு, பாமாயிலுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

Published On 2025-02-18 08:46 IST   |   Update On 2025-02-18 10:33:00 IST
  • வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
  • நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நியாய விலைக்கடைகளுக்கு தேவையான துவரம் பருப்பு, பாமாயிலை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான 6 கோடி பாமாயில் பாக்கெட், 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News