தமிழ்நாடு செய்திகள்
கொட்டிவாக்கத்தில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் - லக்னோவில் மாயமான தம்பதி கைது
- நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
- நேபாள தம்பதியிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் வேலை பார்த்த நேபாள தம்பதி மாயமாகி இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மகேஷ்குமார் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை நீலாங்கரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு மாயமான நேபாளத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ், நிகிதாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.