தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

Published On 2025-06-18 13:05 IST   |   Update On 2025-06-18 13:05:00 IST
  • சகோதரி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
  • கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த சகோதரி பொன்னரசியின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சொந்த சகோதரியிடமே ரூ.17 கோடி மோசடி செய்த ராஜா அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News