தமிழ்நாடு செய்திகள்

தீபாவளியன்று ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்

Published On 2025-10-18 11:54 IST   |   Update On 2025-10-18 11:54:00 IST
  • சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும்.

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News