தமிழ்நாடு செய்திகள்
எழும்பூர்- விழுப்புரம் மெமு ரெயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்
- விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- தாம்பரத்தில் இருந்து காலை புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் பிற்பகல் 12.15 மணி முதல் 3.45 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்து சேர வேண்டிய மெமு ரெயில், திண்டிவனத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.