தமிழ்நாடு செய்திகள்

உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: விவசாயிகளிடம் பட்டியலிட்டு பேசிய இ.பி.எஸ்.

Published On 2025-07-15 11:31 IST   |   Update On 2025-07-15 11:31:00 IST
  • 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.
  • அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

அரியலூர்:

அரியலூரில் விவசாயிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். இதன் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன்களை தள்ளுபடி செய்தோம்.

* 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.

* அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

* அ.தி.மு.க. ஆட்சியில் உழவன் செயலியை அறிமுகம் செய்து, பருத்தி நோய் தாக்குதலின் போது மருந்து அடிக்க பரிந்துரைத்தோம்.

* மரவள்ளி கிழங்கு நோய் தாக்குதலுக்கு, மாவு பூச்சி பயிர்களுக்கு தேவையான மருந்து அடித்து பாதுகாத்தோம்.

* அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏரிகளை தூர்வாரிய போது வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்பெற்றாக கூறினார்.

Tags:    

Similar News