தமிழ்நாடு செய்திகள்
டெல்லி கார் வெடிப்பு எதிரொலி- தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் காரில் பயணிப்போரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.